இ.தொ.கா. உபதலைவர் அருள்சாமி மரணம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமி இன்று (06) காலமானார்.
தொழிற்சங்கவாதியும், அரசியலில் நீண்ட நாள் அனுபவம் கொண்ட அவர் தனது 59 வயதில் இயற்கை எய்தினார்.
இவர் 06.01.2018 அன்று அதிகாலை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இயற்கை எய்தியதாக அவரின் புதல்வர் தெரிவித்தார்