தடம் புரண்டது லொறி; இருவர் நசியுண்டு பலி!
கொழும்பு, ஜா – எல, வெலிகம்பிடிய பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் நசியுண்டு உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்கலன் ஏற்றிவந்த லொறியொன்று வீதியை விட்டுத் தடம் புரண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டது எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.