பொலிஸ் நிலைய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து! – பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கு வேட்டு

பொலிஸ் நிலைய அதிபர்கள் 72 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இடமாற்றம் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி பொலிஸ் நிலைய அதிபர்கள் 72 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டன.

தற்போது அது பாதுகாப்பு செயலாளரின் பரிந்துரை மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இடமாற்றம் பெற்றவர்களுள் 27 பிரதான பொலிஸ் பரிசோதகர்களும் 45 பொலிஸ் பரிசோதகர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *