எம்.பியாகிறார் சாந்த பண்டார – 8 ஆம் திகதி சத்தியப்பிரமாணம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணி தலைவரான சாந்த பண்டார தேசியப்பட்டியல் எம்.பியாக நியமிக்கப்படவுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பெறுவதற்காக எம்.பி.பதவியை ஹில்புல்லாஹ் இன்று இராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே சாந்த பண்டார நியமிக்கப்படவுள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி அவர் உறுதிப்பிரமாணம் ஏற்பார் என தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகலை மாவட்ட எம்.பியாக இருந்த சாந்த பண்டார கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *