மயானபூமியில் ஒருவர் அடித்துக்கொலை – கேகாலையில் பயங்கரம்

மயான பூமியில் வைத்து நபரொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  கேகாலையிலேயே இக்கொடூரச் சம்பவம் இன்று (04) அரங்கேறியுள்ளது.

கேகாலை-  எரமினியகொல்ல பிரதேசத்தில் மரணமடைந்த ஒருவரின் சடலத்தைப் புதைப்பதற்காக மயான பூமியை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த நபரை,  பிரிதொருவர் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளானவரின் ( வயது – 46) தலை சீமந்துத் தரையில் மோதியதில் அவர் படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் , சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கேகாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *