வீழ்ச்சிப்பாதையில் சுதந்திரக்கட்சி – ‘கை’யைக் கைவிட்டு மொட்டுடன் சங்கமித்த 4 உறுப்பினர்கள்!

ஶ்ரீலங்கா சுதந்திரக்  கட்சி பாரிய பின்னடைவை எதிர்கொண்டுவரும் நிலையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் நால்வர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சங்கமித்துள்ளனர்.

மொரட்டுவ மாநகரசபையின் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான டீ.எம். சுமித் புஷ்பகுமார, ரந்து விஜசூரிய, நாலினி பெர்ணான்டோ மற்றும் தீபா ஆரியவங்ச ஆகியோரே இவ்வாறு தாமரை மொட்டுக்கட்சியில் இணைந்துள்ளனர்.

23 ஆளுங்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட மொரட்டுவ மாநகரசபையில் தற்போது ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

மொரட்டுவ மாநகரசபையில் ஐக்கிய தேசிய கட்சியின் 16 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் 4 உறுப்பினர்களும் சுயேட்சை குழுவின் உறுப்பினர் ஒருவரும் எதிர்க்கட்சியில் உள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *