ஆயுதப் பொதியுடன் மர்மநபர்: வவுனியாவில் பாரிய தேடுதல்!

ஆயுதங்கள் அடங்கிய பொதியொன்றை வீசி விட்டுத் தப்பிச் சென்றார் எனக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரைத் தேடி இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் இணைந்து வவுனியாவில் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

வவுனியா – புதூர் நாகதம்பிரான் ஆலய வீதியில் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரைக் கண்டதும், தன்னிடம் இருந்த பொதியை தூக்கி எறிந்து விட்டு தப்பிச் சென்றார் எனக் கூறப்படுகின்றது.

தப்பிச் சென்றவரைப் பொலிஸார் துரத்திச் சென்ற போதும் பிடிக்க முடியவில்லை.

அவரால், கைவிடப்பட்ட பொதியைப் பொலிஸார் சோதனையிட்டனர்.

அதற்குள், கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்குரிய ரவைகளும், நான்கு கைக்குண்டுகளும், இரண்டு ஸ்மார்ட் அலைபேசிகளும், அதற்குரிய 2 மின்கலங்கள் மற்றும் மின்னேற்றி உள்ளிட்ட பொருட்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *