ஐ.தே.க. அரசை எவராலும் இனி கவிழ்க்கவே முடியாது! – அடித்துக் கூறுகின்றார் நளின் பண்டார
“யார் என்ன சொன்னாலும் நாட்டை ஆட்சி செய்யக்கூடிய உண்மையான தலைவர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் மட்டும்தான் இருக்கின்றனர்.”
– இவ்வாறு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசை எவராலும் இனிமேல் கவிழ்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசைத் தக்கவைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.