27 மாடுகளைக் கொன்றது ‘உத்தரா தேவி!’ – கிளிநொச்சியில் நேற்றிரவு பெரும் சோகம்
வடக்கு ரயில் பாதையில் கிளிநொச்சி – முறிகண்டிப் பிரதேசத்தில் 27 மாடுகள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளன.
நேற்றிரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ‘உத்தரா தேவி’ ரயிலில் மோதி இந்த மாடுகள் உயிரிழந்துள்ளன.
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல மாடுகள் அப்பகுதியில் உள்ள வீதிகள் மற்றும் ரயில் பாதையில் உலாவி வருகின்றன.
இவ்வாறு உலாவிக் கொண்டிருந்த மாடுகளே ரயிலில் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன.