மலையகம் போற்றும் மாமனிதருக்கு நினைவஞ்சலிக் கூட்டம்! (படங்கள் இணைப்பு)

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 09 ஆவது சிரார்த்த தினம்  இன்று    அக்கரபத்தன மன்றாசி நிசாந்தினி  மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
முன்னணியின் தற்போதைய தலைவர் வீ. இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் , 
ம.ம.முவின் பொதுச்செயலாளர் லோரன்ஸ், மத்தியசெயற்குழு உறுப்பினர் புஸ்பா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ராஜாராம், முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம் அனுசா சந்திரசேகரன் உட்பட கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அமரர். சந்திரசேகரனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, நினைவுச்சுடர்களைஏற்றி இதன்போது அவரை நினைவுகூர்ந்தனர்.
 
பா. திருஞானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *