கஞ்சாவுடன் ​கைதான இளைஞர் சிறைக்கூண்டுக்குள் தற்கொலை!

கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட 26 வயதான இளைஞர் ஒருவர் கட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர் நேற்று கைதுசெய்யப்பட்டார் எனவும், அதன்போது குறித்த இளைஞரிடம் 1 கிராம் கஞ்சா இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர் கட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *