சகல மாகாண ஆளுநர்களையும் பதவி விலக மைத்திரி உத்தரவு!
வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணங்களின் ஆளுநர்களையும் உடனடியாகப் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்தக் கட்டளை தொடர்பில் ஜனாதிபதியின் செயலரால் நேற்று அனைத்து ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
இன்று திங்கட்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் பதவி விலகல் கடிதத்தை வழங்குமாறு ஆளுநர்களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.
எந்தவகையில் இந்த அறிவுறுத்தலை ஜனாதிபதி வழங்கினார் என்றோ அல்லது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்றோ தெரிவிக்கப்படவில்லை என்று ஆளுநர்கள் தரப்பில் கூறப்பட்டது.