நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இலங்கை வீரர் மெத்தியூஸ் பங்கேற்கார்!

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து அணியுடன் கிறைஸ்ட்சேர்சில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் ஓட்டங்களைப் பெறும்போது காயமடைந்த அஞ்சலோ மெத்தியூஸ், ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், அஞ்சலோ மெத்தியூஸின் இடது தொடையில் ஏற்பட்ட 0யால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *