வடக்கிலிருந்து இராணுவத்தை வௌியேற்றக்கூடாது! மக்களின் நிலங்களை மட்டும் விடுவிக்க வேண்டும்!!
வடக்கில் இருந்து இராணுவத்தை வௌியேற்றக்கூடாது என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.
ஆனால், இராணுவம், தான் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் நிலங்களை மாத்திரம் விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அரச காணிகளிலோ அல்லது பொதுமக்களுக்குச் சொந்தமில்லாத காணிகளிலோ இராணுவம் அதன் படைமுகாமை வைத்திருப்பதற்குத் தான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.