கிளிநொச்சியில் கிணறுகளை துப்பரவு செய்த பாலித எம்.பி.!

கிளிநொச்சிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் விஜயம் செய்த வாழ்வாதார அபிவிருத்தி, வன ஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும தலைமையிலான குழுவினர் கிணறுகளை சுத்தப்படுத்தி வருகின்றனர்.

கிளிநொச்சியில் கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் பல கிணறுகள் வெள்ளத்தால் மூடப்பட்டுக் காணப்படுகின்றன.

இதனால் சுகாதாரமான நீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வெள்ள நீர் கலந்த கிணறுகளைத் துப்பரவு செய்யும் பணியில் பிரதி அமைச்சர் தலையிலான குழுவினர் இன்று ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இன்று பரந்தன் பகுதியில் உள்ள கிணறுகளை மாலை வரை துப்பரவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *