நாளை வெளிவருகின்றது A/L பரீட்சைப் பெறுபேறு!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை நாளை ஞாயிற்றுக்கிழமை (30) வெளியிட எதிர்ப்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகளுக்காக 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *