சிங்களவர்களின் மனதை வென்றுள்ளார்கள் தமிழர்! – ராஜித கூறுகின்றார்

“ஒக்டோபர் – 26 அரசியல் சூழ்ச்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் ஓரணியில் செயற்பட்டார்கள். தமிழர்கள் தமது ஒற்றுமையின் மூலம் சிங்கள மக்களின் மனங்களை வென்றுள்ளனர்.”

– இவ்வாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“தமிழர்கள் தங்கள் ஒற்றுமையின் ஊடாக தெற்கில் உள்ள சிங்களவர்களின் மனதை வென்றுள்ளார்கள்.

தமிழர்களின் இந்த ஒற்றுமை தொடர்ந்தால் தேசிய இனப்பிரச்சினைக்கு நாம் விரைவில் அரசியல் தீர்வைக் கண்டுவிடலாம்.

எந்தத் தடைகள் வந்தாலும் புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை இந்த அரசு அடைந்தே தீரும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *