நாளை கிளிநொச்சி செல்கின்றார் ரணில்!
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் வெள்ள இடர் நிலைமைகளை ஆராய்வதற்காகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை கிளிநொச்சி செல்லவுள்ளார்.
கிளிநொச்சிக்குச் செல்லும் பிரதமர் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளமையுடன் இடரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும் செல்லவுள்ளார் எனத் தெரியவருகின்றது.