பிணைமுறி மோசடியில் இருந்து விடுதலை பெற்றுள்ளது ஐ.தே.க.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி விடுவிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலிப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.