நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்த இருவர் மாயம்!

பபரகம நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இரு இளைஞர்கள் காணாமல்போயுள்ளனர்.

நேற்றுப் பிற்பகல் மணியளவில் குறித்த இருவரும் பண்டாரகம, ராவண நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் உள்ள பபரகம நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே காணாமல்போயுள்ளனர்.

குறித்த இளைஞர்களைக் காப்பற்ற முற்பட்ட மற்றுமொரு நபர் காயங்களுடன் பண்டாரவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *