பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் 4 ஆயிரத்து 35 பேர் வசமாக சிக்கினர்!

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் குடிபோதையில் வாகனங்களை செலுத்திய உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 4 ஆயிரத்து 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5 ஆயிரத்து 550 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 10 மணிமுதல் இன்று பிற்பகல் 2 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

17 ஆயிரத்து 728 பொலிஸார் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றது என அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *