ரயில்வே அதிகாரிகளுக்கிடையே முறுகல் – பொதிகள் தேக்கம்! பயணிகள் திண்டாட்டம்!!

ரயில் சேவையில் ( பெட்டிகளில் ) பொதிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்காமையினால் வியாபாரிகளும் பயணிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர் .

கடந்த ஒரு வார காலமாக பதுளை தொடக்கம் கொழும்பு வரையிலான ரயில் நிலையங்களில் பொதிகள் தேங்கி கிடக்கின்றன.
ரயில்வே அதிகாரிகளுக்கும், ரயிலின் பொதிகளை ஏற்கும் அதிகாதிகளுக்கும் இடையிலான கடமை நிமித்த முரண்பாடுகளே இதற்கான காரணமென கூறப்படுகின்றது.
ஹட்டன் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் பொறுப்பேற்கப்பட்ட பொதிகள் திருப்பி அனுப்படுவதாக  பயணிகள் விசனம் தெரிவிப்பதுடன் , பண்டிகை காலத்தில் அசௌகரியத்திற்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *