பிச்சைக்காரர்கள் இருவர் சண்டை! ஒருவர் மரணம்!!

குருவிட்ட பஸ் நிலையத்திற்கு அருகில் பிச்சைக்காரர் ஒருவர் தாக்கியதில் மற்றுமொரு பிச்சைக்காரர் உயிரிழந்துள்ளார்.

நடுவீதியில் இரு பிச்சைக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் காயமடைந்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குருவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *