மஹிந்தவை விரட்டியடித்து சம்பந்தனைக் காக்க மேற்குலகம் களத்தில்!

சம்பந்தனைப் பாதுகாப்பதற்காக புலம்பெயர் அமைப்புகளும், மேற்குலக நாடுகளும் களமிறங்கியுள்ளன – என்று டளஸ் அழகப்பெரும எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இன்று (22) கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்கு மேற்குலக நாடுகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தீவிரமாகச்செயற்பட்டன.

இவ்விரு தரப்பும் இன்று சம்பந்தனுக்காக களமிறங்கியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த வரக்கூடாது என்பதில் குறியாக இருக்கின்றன.  எம்.பி. பதவியிலிருந்தும் மஹிந்த விரட்டியடிக்கப்படவேண்டும் என்பதுதான் மேற்படி தரப்புகளின் இலக்காக இருக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து வெளியேறிய சம்பந்தன் வேண்டுமென்றே மீண்டும் அங்குவந்துள்ளார்.” என்றும் டளஸ் எம்.பி. கூறினார்.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்போம் என்று சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *