மலையக இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது! – நாலாபுறத்திலும் வலுக்கின்றது ஆதரவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா  வழக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக இளைஞர்களால், கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று (21)  நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

குறித்த போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் மலையகத்திலும் பல பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அத்துடன், களத்துக்கேவந்து பல இளைஞர்கள் நேசக்கரம் நீட்டிவருகின்றனர்.

அதேவேளை, உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை மோசமடைந்துவருகின்றது. எனினும், தீர்வு கிடைக்கும்வரை – தமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *