நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துவிட்டு பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்! – ஜே.வி.பி. வலியுறுத்து
பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டியதே அடுத்து செய்யவேண்டியதென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்றுக் கருத்துத் தெரிவித்த அவர்,
“முதலாவதாக அரச சதிமுயற்சியாளர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். இரண்டாவதாக நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும். மூன்றாவதாக தேர்தலுக்குச் செல்ல வேண்டும்” – என்றார்.
தற்போதைய ஜனாதிபதி பலவீனமடைந்துள்ளார் எனவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையோ மக்கள் ஆதரவோ அவருக்கு இல்லை எனவும் பிமல் ரத்நாயக்க எம்.பி. மேலும் கூறினார்.