ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்ற ஐ.தே.க வுக்குள்ளேயே சதி! – மஹிந்த அணி எச்சரிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான சதி முயற்சிகள் அக்கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளன என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிப்பதற்கு இடமளிக்குமாறும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்காது தனது பதவியைப் பாதுகாத்துக்கொள்ளுமாறும் பிரதமர் ரணிலிடம் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.