மகன் வயது இளைஞருடன் மனைவிக்கு தொடர்பு – கண்டுபிடித்த கணவன் பின் நடந்த பகீர் சம்பவம்!

தமிழகத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில்கள்ளக்காதலுடன் அவருடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.நெல்லை மாவட்டத்தைசேர்ந்தவர் குருசாமி (48). இவர் அங்குள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார். நேற்று முன் தினம் இவர் செங்கல் சூளையில் பிணமாக கிடந்தார்.

குருசாமி உடலில் ரத்த காயம் இருந்ததால் உறவினர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனையில் குருசாமியை சரமாரியாக தாக்கி, அரிவாளால் தலையில் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக பொலிசார்விசாரணை நடத்தினர். அப்போது குருசாமியின் மனைவி ஜெயந்தி (45) முன்னுக்குப் பின் முரணானதகவலை கூறினார். இதனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது கள்ளக்காதலுக்குஇடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து மனைவியே குருசாமியை கொலை செய்ததிடுக்கிடும் தகவல் வெளியானது.

ஜெயந்தி அப்பகுதியில் உள்ள மற்றொரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். அப்போது அந்த சூளையை நடத்தி வந்த செல்வின் ஆபிரகாம் (28) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.இது குருசாமிக்கு தெரிய வந்ததால் அவர் மனைவியையும், கள்ளக்காதலனையும் கண்டித்தார்.

தொடர்ந்து அவர் மனைவியையும், செல்வின் ஆபிரகாமையும்கண்டித்ததால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் குருசாமியை கொலை செய்யதிட்டமிட்டனர். சம்பவத்தன்று செல்வின் ஆபிரகாம், குருசாமி வேலை செய்தசெங்கல் சூளைக்கு சென்றார். அங்கு குருசாமி படுத்திருப்பதை பார்த்ததும் அவரைஅடித்து கொலை செய்தார்.

பின்னர் செல்வின் ஆபிரகாம் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதையறிந்த ஜெயந்தி கணவர் தவறி விழுந்து இறந்ததாக கூறி உடலை அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதை தொடர்ந்து செல்வினையும், ஜெயந்தியையும் பொலிசார் கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *