இல்லறத்தில் இணைந்த சாய்னா – காஷ்யப்!
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் சாய்னா நேவால். அதேபோல் சிறந்த வீரர் பாருபள்ளி காஷ்யப். இருவரும் காதலித்து வருகின்றனர் எனவும், திருணம் செய்து கொள்ள இருக்கின்றார்கள் என்றும் செய்திகள் வெளிவந்திருந்தன.
“கடந்த செப்டெம்பர் மாதம் நாங்கள் இருவரும் காதலித்து வருவது உண்மைதான். இம்மாதம் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம்” என்று சாய்னா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்துகொண்ட போட்டோவை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.