மீண்டும் பிரதமராக மைத்திரி முன் ரணில் சத்தியப்பிரமாணம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று முற்பகல் சுபநேரமான 11.16 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க 5ஆவது தடவையாகப் பிரதமாகப் பதவியேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.