சுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.16 மணியான சுபவேளையில் பிரதமராகப் பதவியேற்பார் எனக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் எடுப்பார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 5ஆவது தடவையாகப் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.