பொத்துவில் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பொத்துவில் பசறிச்சேனை அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு செய்த பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அல்- அப்ஸான் பாடசாலைக்கு அருகாமையில் நேற்று இடம்பெற்றது.
பசறிச்சேனை அபிவிருத்தி அமைப்பின் தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித் உள்ளிட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.