இராவண எல்லையில் 200 அடி பள்ளத்தில் பாய்ந்தது வேன்! 9 பேர் படுகாயம்!! – ஐவரின் நிலைமைக் கவலைக்கிடம்

கதிர்காமத்திலிருந்து வெலிமடையை நோக்கி வந்து கொண்டிருந்த வேனொன்று, இராவணா எல்லை என்ற இடத்தில் 24வது மைல் கல்லருகே, பாதையை விட்டு விலகி, 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் வேனில் பயனித்த சாரதி உட்பட்ட ஒன்பது இளைஞர்கள் படுகாயங்களுக்குள்ளாகி, பதுளை, பண்டாரவளை, தியத்தலாவை ஆகிய அரசினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில், பதுளை அரசினர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருந்து வருவதாக, மருந்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏனைய நால்வரில் இருவர், பண்டாரவளை அரசினர் மருத்துவ மனையிலும், இருவர் தியத்தலாவை அரசினர் மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ் விபத்து குறித்து, எல்ல பொலிசார் ஸ்தல விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதுளை நிருபர்

செல்வராஜா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *