‘யானை’யுடன் ‘கை’யும் இணைவதற்கு வாய்ப்பு!

ஐக்கிய தேசிய முன்னணியின் அரசில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றும் இடம்பெறும் வாய்ப்புகள் இருக்கின்றன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்கி்ரமசிங்க தலைமையில் கூடிய ஆராய்ந்தனர்.

இந்தக் கூட்டத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொள்ளாத, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று, ஐ.தே.மு. அரசில் இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

அவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை எதிர்கால அரசில் சேர்த்துக் கொள்வதானால், நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.தே.மு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *