மூவின மக்களுக்கும் மைத்திரி துரோகமிழைப்பு! – விஜயகலா குற்றச்சாட்டு
நாட்டில் உள்ள மூவின மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகமிழைத்துள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
ஓரிரு நாட்களில் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பார் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசமைப்புக்கு முரணானதென உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே விஜயகலா எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.