கூட்டமைப்பு அரச பங்காளிக்கட்சி அல்ல! – மாவை விளக்கம்

ஐக்கிய தேசிய முன்னணி அரசில் பங்காளிக் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்காது எனவும், தொடர்ந்தும் எதிர்க்கட்சியாகவே செயற்படும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்   மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

”தற்போதைய அரசியல் நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை விபரித்து, ஜனாதிபதிக்கு கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி கூட்டமைப்பினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. எமது 14 எம்.பிக்கள் அதில் கையொப்பமிட்டுள்ளனர்.

அதில் கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும். அந்தக் கடிதத்தை சபையில் சமர்ப்பிக்கின்றேன்.

ஐக்கிய தேசிய முன்னணியினால் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்டவர் என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளிக்கிறோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *