யாழ். பல்கலையில் மோதல்!

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட நான்காவது மற்றும் இரண்டாவது வருட மாணவர்களுக்கிடையில் நேற்று இரவு மோதல் இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தில் நான்காவது வருட மாணவர்களால் இரண்டாவது வருட மாணவர்களுக்கு பகிடிவதை வழங்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட வாய்த்தகராறின் காரணமாகவே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை காயங்களுக்குள்ளான மாணவர்களால் தாக்கிய குறித்த மாணவர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸ் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *