பிரதேச சபை உறுப்பினர் கொலை: பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!
ஹக்மன பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி ஹக்மன, கெம்பிலியாபொல பகுதியில் வைத்து குறித்த பிரதேச சபை உறுப்பினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மாத்தறை குற்றத்தடுப்புப் பிரிவினர் குறித்த சம்பவத்துக்குக் கட்டளை வழங்கி குற்றத்துக்காக பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தறை குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.