சபாநாயகருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை மீறி, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.