மஹிந்தவின் ஆசியுடனேயே ரணில் அலரிமாளிகைக்குள்!
மஹிந்த ராஜபக்சவின் ஆசியுடனேயே ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் தங்கியுள்ளார் என்று பிமல் ரத்னாயக்க எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
” ரணில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. நீங்கள் அலரிமாளிகையில் தங்கியிருங்கள் என்று மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார் என்று ஐ.தே.க. உறுப்பினர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார். எனவே, மஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் .
ரணிலை ஆதரிப்பதாக எமது கட்சி எங்கும் குறிப்பிடவில்லை. 12 ஆம் திகதி பிரேரணை முன்வைக்கப்படும்போது எமது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிலாம்” என்றும் அவர் கூறினார்.