பொலிஸாரையும் விட்டுவைக்காத விபத்துகள்! 3 கான்ஸ்டபிள்கள் பலி!
பதுளை – கோட்டேகொட வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற இ.போ.ச. பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் குறித்த பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பதுளை நகருக்கு அருகில் மோட்டார் வாகனமொன்று மின்சாரக் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், குறித்த மோட்டார் வாகன சாரதியும் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.