அதிஉயர் சபையில் அடிதடி ! வெளியானது சேத விபரம்!

நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிரணி எம்.பிக்களிடையே அண்மையில் ஏற்பட்ட மோதலால் 2 இலட்சத்து 62 ஆயிரம் ரூபா பெறுமதியான சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

சேத விபரம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட, நாடாளுமன்ற அதிகாரிகள் அடங்கிய குழுவினாலேயே மேற்படி மதிப்பீட்டு தொகை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மோதலின் போது இலத்திரனியல் வாக்கெடுப்பு இயந்திரம், சபையின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள கம்பிகள் ஆகியவை சேதமாக்கப்பட்டுள்ளன.

இதன்படி இலத்திரனியல் வாக்கெடுப்பு இயந்திரத்தின் சேதப் பெறுமதி 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எனவும் சபையின் இருமருங்கிலும் பொருத்தப்பட்டுள்ள கம்பிகளின் சேதப் பெறுமதி 30 ஆயிரம் ரூபாய்  எனவும் அக்குழுவினால் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த நவம்பர் 14,15 மற்றும்16 ஆகிய திகதிகளில் நடைபெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிங்க தலைமையில் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *