தான்தோன்றித்தனமான செயல்களால் மனநோயாளியாகியுள்ளார் ஜனாதிபதி! – அநுரகுமார கூறுகின்றார்
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக எடுத்த தீர்மானங்களினாலும் தான்தோன்றித்தனமான செயல்களினாலும் அவர் இன்று மனநோயாளியாகியுள்ளார் எனத் தெரிகின்றது.”
– இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி மனநோயாளி ஆகியபடியால்தான் 225 எம்.பிக்கள் விருப்பப்பட்டாலும் பிரதமர் பதவியைத் தரமாட்டேன் என்கிறார். அவ்வாறு அவரால் சொல்ல முடியாது. அப்படியாயின் அவர் பிரதமர் பதவியை வீட்டிலிருப்பவர்களுக்கா தரப்போகின்றார்?” எனவும் அநுரகுமார எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.