மைத்திரியின் சொந்த இடத்தில் சபாநாயகரின் உருவப் பொம்மை எரிப்பு! – மஹிந்த அணி உறுப்பினர்கள் வெறியாட்டம்

நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி​ உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, நேற்று பொலனறுவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ​அமரகீர்த்தி அதுகோரல ஆகியோரின் பங்குப்பற்றலுடன், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலனறுவை போதனா வைத்தியசாலையிலிருந்து, கந்துருவெல நகர் வரை வந்தடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், சபாநாயகர் கரு ஜயசூரியவின் உருவப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தை நிறைவுசெய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *