சபாநாயகர் – மஹிந்த எதிர்பாராத சந்திப்பு!

சபாநாயகர் கரு ஜயசூரியவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இன்று நேரில் எதிர்பாராமல் சந்தித்துள்ளனர்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவின் தந்தையாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ, பொரளை தனியார் மலர்ச்சாலையில் சபாநாயகரை எதேச்சையாக சந்தித்தார்.

இதன்போது சபாநாயருக்கு அருகில் அமர்ந்திருந்து சில நிமிடங்கள் மஹிந்த அளவளாவியுள்ளார். எனினும், பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *