பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபன வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இசுறு சந்தீப எனும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.