ஐ.தே.முன்னணியுடனான சந்திப்பை நாளை வரை ஒத்திவைத்த மைத்திரி!
அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று நடைபெற இருந்த சந்திப்பு நாளை திங்கட்கிழமை வரை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.
இந்தச் சந்திப்பு நாளை இரவு 8 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.