ஹெரோய்னுடன் சிறுவன் கைது!

இரத்மலானை பிரதேசத்தில், 2 கிராமும் 200 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்னுடன் 17 வயது சிறுவனொருவன், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, குறித்த சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சிறுவன், இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்தவரென, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *