நீராடச் சென்ற 2 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு! – திருமலையில் துயரம்
திருகோணமலை மாபிள் கடலில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்கள் 13 மற்றும் 15 வயதுடையவர்கள் எனப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையின் பின்னர் அவை உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருகோணமலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.