கால்வாயில் வீழ்ந்தது அதிசொகுசு பஸ்! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வர் பலி!!
நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் வலஹாபிட்டிய பகுதியில் அதிசொகுசு பஸ் வீதியை விட்டு விலகி எமில்டன் கால்வாயில் வீழ்ந்ததில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்தக் கோர விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் உயிர்ழந்தவர்களுள் 3 பெண்களும் அடங்குகின்றார்கள் எனவும், இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.